கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

நினைத்தது யாரோ.. நீதானே.

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஜிக்கி


ஆ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

ஆ: மனதில் ஒன்று விழுந்ததம்மா.. விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா.. கைகளில் வந்தே புரிந்ததம்மா
நானறியாத உலகினைப் பார்த்தேன்.. நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே.. படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே..

பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

பெ: பூவெடுத்தேன்.. நான் தொடுத்தேன்.. பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்.. கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவுமில்லை.. மூடிய போது விடியவுமில்லை
கடலைத் தேடும் காவிரி போல் கலந்திட வேண்டும் உன் மடி மேல்
இது புது சொந்தம் அன்பே..

ஆ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.