ஞாயிறு, மே 10, 2015
செவ்வாய், மே 05, 2015
வெள்ளி, மே 01, 2015
ஏட்டில் எழுதி வைத்தேன்
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஓ..ஓ…
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஆ..ஆ..ஹ ஹ ஹ ஹா..ஆ..
திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று..
திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா… இறைவா
விண்வெளியில் மறைத்தாயடா
காடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்..
பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்
தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
சாகச கலைஞனல்லவா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
திரைப்படம்: வானம்பாடி
பாடல்: ஏட்டில் எழுதி வைத்தேன்
பாடியவர்: T.M.S & L.R Eeshwari
இசை: K.V.M
வரிகள்: கண்ணதாசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)