கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


சனி, ஜனவரி 26, 2013

போயும் போயும் மனிதனுக்கிந்த

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

படம் : தாய் சொல்லை தட்டாதே (1961)
இசை : மகாதேவன் 
பாடியவர் : செளந்தர்ராஜன் 
வரிகள் : கண்ணதாசன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.